Police Department News

மதுரை,செல்லூர் சிவகாமி தெருவில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை,செல்லூர் சிவகாமி தெருவில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் போஸ் வீதி, சிவகாமி தெருவில் உள்ள ஜெயமணி காம்பவுண்டில் குடியிருப்பவர் சுரேஷ் மகன் ரமேஸ்குமார் வயது 27/21, இவரது தாய், தந்தையர் ஏற்கனவே இறந்து விட்டனர். அக்காள் செல்வி என்பவர் திருமணம் முடிந்து அவர் மதுரை விளாங்குடியில் வசித்து வருகிறார். இவரது தம்பி மணிகண்டன் கட்டிட நிமிந்தாள் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குடி பழக்கம் அதிகமாகி அதனால் மூச்சு இரைப்பு நோய் இருந்து வந்தது. இவரும் இவரது அண்ணணும் மேற்படி விலாசத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் அண்ணன் ரமேஷ்குமார் கடந்த 30 ம் தேதி காரைக்குடிக்கு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் கடந்த 3 ம் தேதி மணிகண்டன் போனுக்கு செய்த போது மணிகண்டனின் போன் ஸவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் இரவு 9.45 மணிக்கு தனது நண்பன் சேதுவுக்கு போன் செய்து தனது வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அதன்படி அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு ரமேஸின் தம்பி மணிகண்டன் அவரது வீட்டில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது, உடனே ரமேஸுக்கு தகவல் தெரிவித்து விட்டு மணிகண்டன் உடலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி உடல்கூறு ஆய்வு செய்து சவக்கிடங்கில் வைத்திருந்தனர், ரமேஸ் உடனே புறப்பட்டு சவக்கிடங்கிற்கு வந்து தம்பியின் உடலை பார்த்து விட்டு செல்லூர் D2, காவல்நிலையத்தில் புகார் அளித்தார், தனது தம்பியின் இறப்பில் சட்டப்படி விசாரணை செய்து அவரது உடலை நல்லடக்கம் செய்ய உதவும்படி புகார் மனு கொடுத்தார், புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.