Police Department News

நீத்தார் நினைவுதின அணிவகுப்பு நிகழ்ச்சி

நீத்தார் நினைவுதின
அணிவகுப்பு நிகழ்ச்சி

நாள்:21.10.21

காவல் பணியின்போது உயிர் துறந்த காவல் அலுவலர்களுக்கு காவல் மரியாதை செலுத்தும் விதமாக அக்டோபர் 21
அன்று நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள நீத்தார் நினைவு தூண் வளாகத்தில்
இன்று(21.10.21)
காலை 08.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் தலைமையில்
நீத்தார் நினைவு தின அணிவகுப்பு
36 குண்டுகள் முழங்க நடைபெற்றது.

இதில் திருவாரூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள்,காவல் துணைக்
கண்காணிப்பாளர்கள்
காவல் ஆய்வாளர்கள்,
உதவி ஆய்வாளர்கள்,
மற்றும் காவலர்கள்
50 பேர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.