Police Department News

கீழவளவு ரோட்டில் கிடந்த Rs-50,000/- ரூபாயை கீழவளவு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தலைமை பெண் காவலரின் நேர்மைக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்- பாராட்டு தெரிவித்தார்

கீழவளவு ரோட்டில் கிடந்த Rs-50,000/- ரூபாயை கீழவளவு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தலைமை பெண் காவலரின் நேர்மைக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்- பாராட்டு தெரிவித்தார்

கீழவளவு காவல் நிலையம் எதிரே மேலூர் to திருப்பத்தூர் ரோட்டில் கேட்பாரற்று கிடந்த பணம் ரூபாய்-50,000/- தை மேலூர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி- வீரம்மாள், அவர்கள் கீழவளவில் தேவர் ஜெயந்தி பணிக்கு வந்தவர் பணத்தை எடுத்து கீழவளவு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் திரு. பால கிருஷ்ணன், திரு.தர்மலிங்கம் அவர்களிடம் ஒப்படைத்தார் சற்று நேரத்தில் கீழவளவு வீரமணிபட்டியை சேர்ந்த முத்தையா மகன் கருப்பையா வயது-45 என்பவர் பணத்தை கீழவளவில் உள்ள வங்கிக்கு செலுத்த வந்தவர் தொலைத்து விட்டார் மேலும் பணத்தை காணவில்லை என கீழவளவு காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தவரிடம் விசாரித்து மேற்படி பணம் அவருடையதுதான் என தெரிய வரவும் நல்ல முறையில் Rs-50’000/- ஒப்படைக்கப்பட்டது பணத்தைப் பெற்றுக்கொண்ட கருப்பையா என்பவர் காவல்துறைக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார் பெண் காவலரின் நேர்மையை பாராட்டி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் IPS., அவர்கள்மற்றும் மேலூர் DSP அவர்கள் மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.