காவல் துறையினர் விடுப்பு எடுக்க அலைபேசி செயலி அறிமுகம்
காவல் ஆளிநர்கள் தங்களது தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, வாராந்திர அனுமதி விடுப்பு ஆகியவற்றை ஆன்லைன் மூலம் சமர்ப்பித்து விடுப்பு பெறும் CLAPP என்ற செயலியை, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று துவக்கி வைக்கிறார். இனி காவல் ஆளிநர்கள் தங்களது செல்போன்களில் CLAPP என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, தங்களது செல்போன் செயலி மூலமே விடுப்புகளை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விடுப்பு 3 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை முதல்வர் துவக்கி வைத்தார். உள்துறை செயலர் பிரபாகர் டி.ஜி.பி., சைலேந்திரபாபு சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் ஆகியோர் பங்கேற்றனர்.
