

மதுரை திருமங்கலம் அருகே வாலிபர் தற்கொலை திருமங்கலம் தாலுகா போலிசார் விசாரணை
மதுரை திருமங்கலம் அருகேயுள்ள மைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மகன் பூமிநாதன் வயது 20/2022, இவர் மதுபோதைக்கு அடிமையாகி இருந்தார் மதுரையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார் ஒரு மாதத்திற்கு முன்பு மறுவாழ்வு மையத்திலிருந்து வீட்டிற்கு வந்தவர் மீண்டும் மது அருந்தியுள்ளார் இதை பெற்றோர் கண்டித்தனர் மனமுடைந்த பூமிநாதன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் தாலுகா போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
