பாலக்கோடு .அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பாலக்கோடு காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஊர்வலம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி அவர்கள். காவல் ஆய்வாளர் கவிதா அவர்களின் தலைமையில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணிதல் சாலை விதிகளை பின்பற்றுதல் குழந்தை திருமணம் தடுத்தல் விழிப்புணர்வு போதை பழக்கத்திற்கு ஆளாகாதே ஆகிய பதாகையை ஏந்தி பாலக்கோடு முக்கிய சாலையிலான எம் ஜி ரோடு பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை பாலக்கோடு காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இதையொட்டி விபத்துகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து, படுகாயம் உள்ளிட்ட அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தீயணைப்பு படையினர் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சுப்பிரமணியபுரம் குருகுலம் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பெரியார் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் போலீசார், பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக […]
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டையில் மாற்றுத்திறனாளி களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அரிசி பருப்பு மளிகை பொருட்களை கொரோனா நிவாரணமாக வழங்கினார். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மனோகரன் கடந்த ஏழாம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். கண்காணிப்பாளராக பொறுப்பேற்று கொண்டதில் இருந்தே மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார். இந்நிலையில் முதன் முறையாக அருப்புக்கோட்டைக்கு வந்த காவல் கண்காணிப்பாளர் மனோகரன் சின்னபுளியம்பட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஊரடங்கால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி பருப்பு […]
மதுரை மாநகர காவல் துறை சிறுவர் மன்றத்தில் முதியவர்கள் பற்றி ஆய்வு 40 சதவீதம் பேர் வாழ்க்கை வெறுமையில் உள்ளனர் மதுரை கரிமேடு போலீசாருடன் இணைந்து அப்பகுதி சிறுவர் மன்றத்தினர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களிடம் மேற்கொண்ட மனநலன் குறித்த ஆய்வில் 40 சதவீதம் பேர் வாழ்க்கையை வெறுமையுடன் கழிப்பதாக தெரிவித்துள்ளனர் ஆய்வில் 50 சதவீதம் பேர் வாழும் சூழலும் உறவினர்கள் தெரிந்தவர்கள் தங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளனர் உடல் நலம் குறித்தும் வருத்தம் […]