தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி கட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் 70 மற்றும் ராஜா அவரது விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாரண்டஅள்ளி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து பெல்ரம்பட்டி கட்டுக்கொட்டாய் கிராமத்திற்கு விரைந்து சென்ற மாரண்டஅள்ளி காவல்துறையினர் அங்கு விவசாய நிலத்தில் 10 மேற்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரிய வந்தது உடனடியாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள பேக்கரி கடைக்கு சீல்,கடை வாடகை கட்டாததல் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான கடையில் மணிவண்ணன் என்பவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார், பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகையை இது நாள்வரை செலுத்தவில்லை, பேரூராட்சி நிர்வாகம் சொத்து வரி, கட்டிட வரி, குடிநீர் வரி கடை வாடகை ஆகியவற்றின் மூலம் பெறப்படும் நிதியிலிருந்து பாலக்கோடு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி […]
திண்டுக்கல்லில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 40). இவர் நந்தவனப்பட்டியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவு 11.45 மணியளவில் மரக்கடையில் தீ பிடித்து எரிவதாக அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரி வித்துள்ளனர். இதை கேட்டதும் அலறியடித்து பாலசுப்பிரமணி ஓடி வந்தார். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் […]
மதுரையில் காவலர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் பொருட்டு ஆலோசனை மதுரையில் 25/8/2022 ரயில் நிலையத்தில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு ஆலோசனை நடைப்பெற்றது!!. மதுரை இருப்புப்பாதை காவல் உட்கோட்டத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு வேலை பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு,பொது மக்களிடம் காவலர்கள் எவ்வளவு கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.என்பது உள்ளிட்ட பல்வேறு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கும் பொருட்டு காவலர்களின் மனமகிழ்ச்சிக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இருப்புப்பாதை காவல்துறை […]