
பஞ்சப்பள்ளியில் 3.26இலட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி காவல்துறையினர் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பஞ்சப்பள்ளியிலிருந்து மாரண்டஅள்ளி நோக்கி வேகமாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரானை செய்தனர்.
சந்தேமடைந்த காவல்துறையினர் வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்ததில் 3.26 இலட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்பராக் பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து 4 இலட்சம் மதிப்புள்ள வாகனத்துடன் 3.26 இலட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் போதை பொருட்களை கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் அளேசீபம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் இம்ரான் (வயது. 24) என்பவர் கைது செய்யப்பட்டார்,
மேலும் தப்பியோடிய சந்தோஷ்குமாரை தேடி வருகின்றனர்.
பெங்களுரிலிருந்து தேன்கனிகோட்டை வழியாக சேலத்திற்க்கு கொண்டு செல்ல குட்காவை கடத்தி வந்ததாக விசாரனையில் தெரிய வந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த பஞ்சப்பள்ளி காவல்துறையினர் இம்ரானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
