Police Department News

பாலக்கோடு அருகே கஞ்சா பதுக்கிய விற்ற முதியவர் கைது

பாலக்கோடு அருகே கஞ்சா பதுக்கிய விற்ற முதியவர் கைது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல்துறையினர் பாலக்கோடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தாமரை ஏரி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பேளரஅள்ளி பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 67) என தெரியவந்தது. மேலும் அவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவர் பதுக்கி வைத்திருந்த 450 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published.