

மாரண்டஅள்ளி கணபதி நகரில் கடையின் மேற்கூரை சிமென்ட் சீட்டு அமைக்கும் பணியின் போது கீழே விழுந்து வெல்டிங் தொழிலாளி சாவு.
மற்றொருவர் பலத்த காயம் .
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி கணபதி நகரை சேர்ந்தவர் இளங்கோ இவர் அப்பகுதியில் டிரேடர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது கடையின் மேற்கூரை பலத்த காற்றினால் சேதமடைந்தது, இதனை சரிசெய்ய நேற்று குத்தல அள்ளியை சேர்ந்த மாதன் (55) ஜக்கசமுத்திரத்தை சேர்ந்த வெங்கடேசன் (45) ஆகிய இரண்டு வெல்டிங் தொழிலாளர்களை அழைத்து வந்து மேற்கூரை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தினார். வேலை செய்து கொண்டிருக்கும் போது மேற்கூரையின் சிமென்ட் சீட் உடைந்து இருவரும் கீழே விழுந்தனர், இதில் மாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட மூர்ச்சையானார், வெங்கடேசனுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்,
இவர்களை பரிசோதித்த மருத்துவர் மாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
வெங்கடேசன் (45) சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் கடை உரிமையாளர் வெங்கடேசன், கடை நடத்துபவர் இளங்கோ ஆகிய இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
