Police Department News

பாலக்கோடு அருகே மாமியாரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்கோடு அருகே மாமியாரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்த குண்டுமணி மகன் பூவரசன் (வயது 26), கட்டிட மேஸ்திரி, இவருக்கும் அருகே உள்ள கவுண்டனூரை சேர்ந்த பிரியா (20) என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்க்கு முன்னர் திருமணம் நடந்தது. பூவரசன் மனைவியை, தன்னுடன் கட்டிட வேலைக்கு வரும்படி வற்புறுத்தி வந்துள்ளார், இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு நேற்று முன்தினம் கவுண்டனூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்று மனைவியை வீட்டுக்கு வரும்படி பூவரசன் அழைத்துள்ளார். அதனை மாமியார் முனியம்மாள் தட்டிக் கேட்டதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் முனியம்மாளை, பூவரசன் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூவரசனை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.