Police Department News

மதுரையில் கோழி வியாபாரி மீது தாக்குதல்

மதுரையில் கோழி வியாபாரி மீது தாக்குதல்

மதுரை எம். சத்திரப்பட்டியை சேர்ந்தவர் வடவள்ளி (வயது55). இவர் கல்லம்பட்டியில் நாட்டுக்கோழி பண்ணை நடத்தி வருகிறார். இந்தநிலையில் வடவள்ளி மற்றும் உறவினர் பாக்கியம் ஆகிய 2பேரும், இரவு பண்ணையில் இருந்தனர். அப்போது குடிபோதையில் வந்த 2பேர், பண்ணைக்குள் அத்துமீறி புகுந்து தகராறு செய்தனர். அதனை வடவள்ளி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 2பேரும் அவரை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த வடவள்ளி, பாக்கியம் ஆகிய 2 பேரும், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றிய புகாரின் பேரில் எம்.சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடச்சனேந்தல் பட்டர் மகன் சீனிவாசன் (23), திருப்பாலை கோவிந்தன் (42) ஆகிய 2பேரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.