Police Department News

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகன் செந்தூர்பாண்டி (வயது23). இவர் மீனாம்பிகை நகரில் நடந்து சென்றார். அப்போது 3 பேர் கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து செந்தூர்பாண்டி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மீனாம்பிகை நகர் 7-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (24), மீனாம்பிகை நகர் 9-வது தெரு திருப்பதி (24), முருகபாண்டி (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

திருச்சி வசந்த நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50). இவர் கே.புதூர் பாரதியார் ரோடு, வண்டி பாதை சந்திப்பில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை ஒருவர் வழிமறித்து பணத்தை பறித்து சென்றார். இது தொடர்பாக சுப்பிரமணியன், கே.புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனிடம் பணம் பறித்த கே.புதூர் காந்திபுரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்த ரஞ்சித் குமார் (31) என்பவரை கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published.