Police Department News

மாடியில் இருந்து தவறி விழுந்து வங்கி காசாளர் பலி

மாடியில் இருந்து தவறி விழுந்து வங்கி காசாளர் பலி

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (54). இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, அவர் தனது வீட்டில் மாடியில் துணியை உலர்த்தி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.