
அபராதம் கட்டுறீங்களா..?
நீதித்துறையில் உள்ள சிறப்பு அம்சம்!
குடிமக்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் அதற்கு இறுதியான தீர்வு சட்ட தீர்வுதான் என்பதால், அதை சட்ட பூர்வமான முறையில் தீர்த்து வைப்பதற்கு என உருவாக்கப்பட்ட துறைதான் நீதித்துறை. மேலும் சட்டபடி ஒருவர் செய்த குற்றத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கும் சிறப்பான அதிகாரத்தை பெற்றுள்ள துறையும் நீதித்துறை தான்.
அதாவது “நிர்வாகத்துறையால் குற்றம் மட்டுமேதான் சாற்ற இயலும்”. அந்த குற்றச்சாட்டு உண்மையா அல்லது பொய்யா என்பதை விசாரித்து குற்றம் உண்மை எனில் அதற்கான சிறைத் தண்டனையை கொடுக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு மட்டுமே உண்டு.
அபராதம் விதிக்கும் உரிமை அரசுக்கு உண்டு. இதை நீங்கள் விரும்பினால் மட்டுமே செலுத்தலாம். விரும்பவில்லை என்றால், நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கை சந்தித்து உரிமையை நிலை நாட்டிக் கொள்ளலாம்..
