
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்து பாகல் பட்டியில் லாரி கார் மீது மோதி விபத்து.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாகல்பட்டி பகுதியில் உள்ள தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 11. 30 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்திற்கு முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இரு வாகனங்களும் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. அதனை தொடர்ந்து பின்னால் வந்த லாரியும் இந்த விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் சிக்கிய ஓட்டுனர் களை வாகனங்களில் இருந்து மீட்டனர். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த டிரைவர் மற்றும் லாரி டிரைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் இந்த விபத்து குறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
