Police Department News

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மேலபட்டியை சேர்ந்தவர் சந்தானம்(வயது45). இவரது மனைவி இறந்து விட்டார். சொக்கநாதன்பட்டியில் 2 மகள்கள் மனைவியின் சகோதரி பராமரிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களை பார்ப்பதற்காக சந்தானம் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். திருமங்கலம் குதிரைசாரி குளம் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்சியை சேர்ந்த கிருபா ராஜதுரை என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியது. இதில் சந்தானம் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனு ப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.