
மனைவி குழந்தை காணவில்லை, கணவர் போலீசில் புகார்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் B.6 காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட சோலையழகுபுரம் திருப்பதி நகர் பகுதியில் குடியிருந்து வரும் செல்வக்குமார் வயது 30, இவர் மதுரை மாட்டுத்தாவணி மார்கெட்டில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார்.இவருக்கு நான்கு ஆண்டுகக்கு முன்பு ஜனனி வயது 19 என்பவருடன் திருமணமாகி இவர்களுக்கு மகிழினி வயது 2 1/2, என்ற மகளும் உள்ளார்.இந்த நிலையில் கடந்த 7 ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் ஜனனி தன் குழந்தையுடன் தையல் கடைக்கு சென்று வருகிறேன் என்று சென்றவர் வீடு திரும்ப வில்லை கணவர் செல்வகுமார்
எங்கு தேடியும் கிடைக்காததால் ஜெய்ஹிந்த்புரம் B 6 காவல் நிலையத்தில் தன் மனைவி குழந்தையை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார் புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் காவல் நிலைய குற்ற எண் 97/24, ன்படி வழக்கு பதிவு செய்து தாய் குழந்தையை தேடி வருகிறார்கள்
