
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
மதுரை சக்குடி அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி இவருடைய மகன் நவீன் வயது ( 20 ) இவர் கொலை வழக்கில் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் திரு. லோகநாதன் அவர்கள் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் நவீன் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
