




மதுரை மாநகரில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (02.10.2024) நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 20 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் துணை ஆணையர்(தலைமையிடம்) அவர்களிடம் அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் துணை ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
