Police Department News

மதுரை மாட்டுதாவணியில் புதிய கண்ணிப்பு கேமரா அறை

மதுரை மாட்டுதாவணியில் புதிய கண்ணிப்பு கேமரா அறை

மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய கண்காணிப்பு கேமரா அறையை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.J.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்து, பேருந்து நிலையத்தில் உள்ள புறகாவல்நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிகக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். குற்றச் செயல்களை கண்காணித்து தடுக்கும் விதமாக புதிதாக 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமரா அறையில் குற்றங்கள் நடைபெறாமல் தவிர்க்கும் விதமாக 24 மணி நேரமும் காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு), மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து),சரக உதவி ஆணையர், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.