
கொலை வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த ஆய்வாளருக்கு சென்னை பெருநகர ஆணையர் பாராட்டு
சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய கொலை வழக்கில், சிறப்பான முறையில் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 2 எதிரிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2000/- அபராதம் என கடுமையான தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர் திரு. S. மீனாட்சி சுந்தரம், அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (அப்போதைய மயிலாப்பூர் காவல் ஆய்வாளர்) அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
