Police Department News

மதுரை அவனியாபுரம் பகுதியில் இளம் பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது

மதுரை அவனியாபுரம் பகுதியில் இளம் பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது

கடந்த நான்காம் தேதி ( 04/04/25 ) மதுரை அவனியாபுரம் நாகப்பா நகரைச் சேர்ந்த இளம் பெண் வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது அவரின் வீட்டிற்கு அருகே மறைந்திருந்த ஒருவர் இளம் பெண் கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி முலாம் பூசப்பட்ட செயினை வழிப்பறி செய்தது சம்பந்தமாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் இருந்தது

இந்த நிலையில் அவனியாபுரம் காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி சி டிவி கேமராக்கள் செல்போன் டவர் சிக்னல்கள் சிறையில் இருந்து வெளிவந்த குற்றவாளிகளின் விவரங்களை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் மண்டேலா நகர் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மதுரை வலையங்குளத்தைச் சேர்ந்த நல்ல மருது என்பவரது மகன்நல்லு முருகன் வயது 23 என்பவரை விசாரிக்கையில் செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது அவரைக் கைது செய்து மண்டேலா நகர் சின்ன உடைப்பு அருகில் மண்ணில் புதைத்து வைத்திருந்த செயினை காவல்துறையினர் கைப்பற்றிய போது காவலர்கள் பிடியிலிருந்து தப்பிக்க சாலையின் அருகே இருந்த பாலத்தில் இருந்து குதித்து தப்பியோட முயற்சி செய்தபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுப்பி வைத்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.