
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்
மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (26.07.2025) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில், குற்ற தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்
