Police Department News

மதுரை சிம்மக்கல் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் போதை பொருள் தடுப்பு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளர்

மதுரை சிம்மக்கல் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் போதை பொருள் தடுப்பு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளர்

மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜே. லோகநாதன் IPS அவர்களது ஆணைக்கிணங்க.. போக்குவரத்து காவல் துணை ஆணையர்.. எஸ் வனிதா அவர்களது உத்தரவுப்படி, நேற்று 29/07/25 மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் அவரவர் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி பேருந்து நிறுத்தங்கள்.. மற்றும் முக்கிய போக்குவரத்து சிக்னல் சந்திப்புகளில் பள்ளி மாணவர்களுக்கு பேருந்து பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்..இந்த வகையில் மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ.தங்கமணி அவர்கள் சிம்மக்கல் அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான பேருந்து பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.. மேலும் பேருந்து படிக்கட்டில் நின்று கொண்டும் தொங்கி கொண்டும் சென்றால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்றும். விபத்தின் விபரீதம் குறித்தும் மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் உணர்வு பூர்வமாக எடுத்துரைத்தார் மேலும் போதை பொருள் தடுப்பு அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிறைவாக பேருந்தின் படிக்கட்டில் நின்றுகொண்டோ, தூங்கிக்கொண்டோ, செல்ல மாட்டோம் என்று மாணவர்கள் அனைவரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முன்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.