
கஞ்சாவுடன் வாலிபர் கைது
மதுரை கூடல் புதூர் போலீஸ் எஸ்.ஐ தனலட்சுமி தலைமையில் போலீசார் கூடல் நகர் குட்செட் ரோடு கண்மாய் வழியாக ரோந்து சென்றனர். அப்போது கையில் பையுடன் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த வாலிபர் சிக்கினார்.அவரிடம் இருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருப்பது சோதனையில் தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த செந்தில் வேல் மகன் ஹரிஹரன் வயது (20) என்பது தெரிந்தது. பின்னர் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
