
மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்கு அடியில் மின் தீ விபத்து விரைந்து செயல்பட்டு விபத்து தடுத்த ரயில்வே பாதுகாப்பு படையினர்
மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்குள் காலை 07.20 மணிக்கு புகைமூட்டம் ஏற்பட்டது.
உடனடியாக பணியில் இருந்த ஆர்பிஎஃப் ஊழியர் திரு. மீனாட்சி சுந்தரம் காவலர், அதை கவனித்தார். அவர் டிசிபி தீயணைப்பு கருவியைப் பயன்படுத்தி 7.30 மணிக்கு தீயை அணைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 07.40 மணிக்கு விரைந்து வந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் திரு. அஜித் குமார் மற்றும் ஊழியர்கள் மற்றும் இருப்பு பாதை காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து துரித நடவடிக்கை எடுத்தனர்.


 
                            


