Police Department News

மதுரை, இமயம் நகரில் கஞ்சா விற்பனை செய்து கையும், களவுமாக 22 கிலோ கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது. போலீஸார் தீவிர விசாரணை

மதுரை, இமயம் நகரில் கஞ்சா விற்பனை செய்து கையும், களவுமாக 22 கிலோ கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது. போலீஸார் தீவிர விசாரணை

கூடல்புதூரில், இமயம் நகர் பகுதியில் கஞ்சா விற்பதாக D3, காவல் நிலைய ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அவர் சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் பார்ட்டியுடன் சென்று அதிரடி சோதனை நடத்தினார்,

அப்போது அங்கு பத்துக்கும மேற்பட்ட வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது, போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சித்த போது 3 நபர்கள் மட்டும் பிடிபட்டனர், மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

கூடல்புதூர் காவல் நிலைய காவலர்கள், பிடிபட்ட 3 நபர்களையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இமயம் நகரை சேர்ந்த இரணியன் மகன் பிரதீப் என்ற பிரகதீஸ்வரன் வயது 36/2020,
மீனாம்பாள்புரத்தை சேர்ந்த பாண்டியம் பிள்ளை மகன் கண்ணன் வயது 43/2020,
பீபீ குளம் பகுதியை சேர்ந்த மலைச்சாமி மகன் சுதாகரன் வயது 43/2020, என தெரிய வந்தது. இவர்கள் ஏற்கனவே கஞ்சா வழக்கில் தொடர்புடையவர்கள், இவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கைதான இந்த 3 நபர்கள் போக மீதம் தப்பியோடிய காசி என்ற காசிராஜன், ஓவாயன் பாலமுரளி, வெற்றிவேல், முருகன், மொட்ட மணி, லவ் பெயிலியர் என்ற விக்கி, போதை ராம்குமார், வின்சென்ட செல்வராஜ் என்ற தம்பு, சிவமணி, குட்டி சதீஸ், சுள்ளான் கார்த்தி, காவேரிமணியன் மகன் மணி, மணிகண்டன், மெட்ராஸ் பாலாஜி, ஆகியோரை தேடி வருகின்றனர்.

பிடிபட்ட 3 நபர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர், மற்றும் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.