திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” (Operation Smile) என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு மற்றும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட காப்பகத்தில் ஒப்படைத்தும், குழந்தைகளின் நலனுக்காக குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவார்கள். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. மீனாட்சி அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, மாவட்ட தொழிலாளர் நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் சைல்டு லைன் ஆகியோருடன் சேர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 1.திருவள்ளூர் 2.ஊத்துக்கோட்டை 3.பெரியபாளையம் 4.திருத்தணி 5.பள்ளிப்பட்டு 6.பொன்னேரி 7.கும்மிடிப்பூண்டி 8.சோழவரம் 9.மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகளை மீட்டு மேலும் காணாமல் போன சிறுவர், சிறுமிகள் 9 பேரை மீட்டு மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள காப்பகங்களை ஆய்வு செய்து 6 இடங்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, தகுந்த அறிவுரைகளை வழங்கி குழந்தைகளின் எதிர்காலம் கருதியும், குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகள் மற்றும் காணாமல் போன 9 குழந்தைகள் மீட்டு பெற்றோர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி அவர்களுடைய பெற்றோர்களிடம் குழந்தைகளை அனுப்பி வைத்தனர்.
Related Articles
ஒருவரை கொலை செய்யாவேண்டிய நோக்கத்தோடு செய்த செயலால் வேறு ஒருவருக்கு மரணம் விளைவித்தல்
ஒருவரை கொலை செய்யாவேண்டிய நோக்கத்தோடு செய்த செயலால் வேறு ஒருவருக்கு மரணம் விளைவித்தல் ,இந்திய தண்டனைச் சட்டம் -1860 பிரிவு 301 ஒருவருக்கு மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது மரணம் உண்டாகும் என்று தெரிந்து ஒரு செயல் புரியப்படுகின்றது. அந்த செயலின் விளைவாக வேறு ஒருவருக்கு மரணம் சம்பவிக்கிறது. ஆனால் காரியத்தை செய்தவருக்கு இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள நபரை கொலை செய்ய வேண்டும் என்ற கருத்தோ அல்லது தன் செயலால் அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்ற […]
மதுரையில் தனியார் மதுபான பாரில் ஊழியர்களை தாக்கிய சி.பி.ஐ., ஜி.எஸ்.டி., சுங்க அதிகாரிகள் 4 பேர் கைது
மதுரையில் தனியார் மதுபான பாரில் ஊழியர்களை தாக்கிய சி.பி.ஐ., ஜி.எஸ்.டி., சுங்க அதிகாரிகள் 4 பேர் கைது ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் தோபாராவை சேர்ந்தவர் விஜயந்தர் சிங் மகன் தர்மேந்திர் சிங் (வயது 32). இவர் தஞ்சாவூரில் ஜி.எஸ்.டி. அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஹரியானா மாநிலம் ரேவரி மாவட்டம் குருவாடாவை சேர்ந்த பரத் சிங் மகன் ராகுல் யாதவ் (32). இவர் தூத்துக்குடியில் கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜி ஜுன்ஸ் ஜினுவைச் […]
தென்காசியில் அரசு டாக்டரின் கணவர் திடீர் சாவு
தென்காசியில் அரசு டாக்டரின் கணவர் திடீர் சாவு தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பாரதி நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (வயது 39). இவருக்கு திருமணமாகி வளர்மதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். வளர்மதி தென்காசி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவில் ஜெயபிரகாஷ் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சரியாக தூக்கம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் எழுந்து வீட்டின் முன் பகுதியில் […]




