திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” (Operation Smile) என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு மற்றும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட காப்பகத்தில் ஒப்படைத்தும், குழந்தைகளின் நலனுக்காக குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவார்கள். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. மீனாட்சி அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, மாவட்ட தொழிலாளர் நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் சைல்டு லைன் ஆகியோருடன் சேர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 1.திருவள்ளூர் 2.ஊத்துக்கோட்டை 3.பெரியபாளையம் 4.திருத்தணி 5.பள்ளிப்பட்டு 6.பொன்னேரி 7.கும்மிடிப்பூண்டி 8.சோழவரம் 9.மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகளை மீட்டு மேலும் காணாமல் போன சிறுவர், சிறுமிகள் 9 பேரை மீட்டு மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள காப்பகங்களை ஆய்வு செய்து 6 இடங்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, தகுந்த அறிவுரைகளை வழங்கி குழந்தைகளின் எதிர்காலம் கருதியும், குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகள் மற்றும் காணாமல் போன 9 குழந்தைகள் மீட்டு பெற்றோர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி அவர்களுடைய பெற்றோர்களிடம் குழந்தைகளை அனுப்பி வைத்தனர்.
Related Articles
மதுரை, திருப்பாலை பகுதியில் நான்கு சக்கர வாகனம் திருட்டு திருப்பாலை போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை, திருப்பாலை பகுதியில் நான்கு சக்கர வாகனம் திருட்டு திருப்பாலை போலீசார் தேடி வருகின்றனர் மதுரை மாநகர் திருப்பாலை D4, காவல் நிலைய எல்லைக்குடபட்ட பகுதியான திருப்பாலை இந்திரா சாலை பெரியசாமி கோனார் காம்பவுண்டில் வசித்து வருபவர் லக்ஷிமணன் மகன் ராமகிருஷணன் வயது 42/21, இவர் திருப்பாலை TWAD காலனி 1 வது தெருவில் ஶ்ரீ காளியம்மன் ஆட்டோ மொபைல்ஸ் என்ற பெயரில் சர்விஸ் சென்டர் நடத்தி வருகிறார்.இவர் கடந்த 4 ம் தேதி காதர் என்ற […]
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. தெ.கண்ணன் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாள் : 18 11 2019 இடம் : காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. தெ.கண்ணன் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் திரு. தெ.கண்ணன் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை காஞ்சிபுரம் மாவட்ட தனிப் பிரிவு ஆய்வாளர் திரு.திருவள்ளுவர் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். செங்கல்பட்டில் மாவட்ட காவல் அலுவலக இடம் தேர்வு செய்யப்படும் வரை […]
ஐஏஎஸ் அதிகாரியாக பணிக்கு வந்த மகளுக்கு சல்யூட் அடித்த போலீஸ்
ஐஏஎஸ் அதிகாரியாக பணிக்கு வந்த மகளுக்கு சல்யூட் அடித்த போலீஸ் தெலுங்கானாவில் காவல் கண்காணிப்பாளாராக (SP) பொறுப்பில் இருக்கும் அதிகாரி என். வெங்கடேஸ்வரலு. தெலுங்கானா போலீஸ் அகடமியின் துணை இயக்குனராகவும் இருக்கும் இவரது அலுவலகத்திற்கு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் வருகை தந்து இருந்தனர். செமினார் ஒன்றிற்காக வந்து இருந்த பயிற்சி ஐஏஎஸ்களில் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்தியும் ஒருவார் ஆவர். அகடமியில் தனது மகளை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த வெங்கடேஸ்வரலு ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரி என்பதால் […]



