Police Recruitment

மதுரை, சீமான் நகரில் நர்ஸ் தூக்குப் போட்டு தற்கொலை, அண்ணாநகர் போலீசார் விசாரணை

மதுரை, சீமான் நகரில் நர்ஸ் தூக்குப் போட்டு தற்கொலை, அண்ணாநகர் போலீசார் விசாரணை

மதுரை மாநகர், அண்ணாநகர் E3, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான சீமான் நகர், வடக்குத்தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணன் மகன் தமிழன் வயது 61/21, இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், அதில் மூத்த பெண் கெளசல்யா வயது 24/21, நர்ஸிங் முடித்து நரிகுடி அருகே உள்ள குருவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு வருடமாக பணியாற்றி வந்தார், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இரண்டாவது பெண் ரம்மியா இவர் அதே தெருவை சேர்ந்த ராமூர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் மூத்த மகள் கெளசல்யா தனது தோழியின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டி கடந்த 24 ம் தேதி குருவிகுளத்திலிருந்து வீட்டிற்கு வந்ததாகவும் மறுநாள் 25 ம் தேதி உடல் நலமில்லா காரணத்தால் வேலைக்கு செல்லாமல் மறுநாள் வேலைக்கு செல்லுவதாக கூறி வீட்டிலிருந்தார்.இவரின் தாயும், தந்தையும் தங்களது உறவினரின் திருமணத்திற்கு நெடுமதுரைக்கு சென்றிருந்தனர் திருமணம் முடிந்து மாலை 4 மணி்யளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. வெகு நேரம் கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை ஆதலால் வீட்டின் ஓட்டைப் பிரித்து உளளே இறங்கி பார்த்த போது அவர்களது மகள் கெளசல்யா சேலையால் பனைமர விட்டத்தில் தனக்குத் தானே தூக்கு மாட்டி தொங்கினார், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் தூக்கில் தொங்கிய கெளசல்யாவை கீழே இறக்கி பார்த்த போது அவர் இறந்த நிலையில் இருந்தார், உடனே அண்ணா நகர் E3, காவல் நிலையம் சென்று தனது மகள் கெளசல்யா இறப்பு பற்றி சட்டப்படியான விசாரணை நடத்தித் தருமாறு புகார் அளித்தார், புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் விரைந்து நடவடிக்கையெடுத்தார், ஆய்வாளர் திரு. பூமிநாதன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திருமதி. சுபா அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.