ஈசிஆர் சாலையில், ஆந்திர மாநில ஐடி பெண் ஊழியரை இரும்புக் கம்பியால் தாக்கி , அவரிடமிருந்து 15 சவரன் தங்க நகை, விலை மதிப்புள்ள ஐ போன் பறிக்கப்பட்டது. பாதிப்புக்குள்ளான அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ராதா (30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மென் பொறியாளரான இவர் சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இவர் நாவலூர் அருகில் உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் […]
Author: policeenews
நீலாங்கரையில் தந்தையை கொலை செய்த மகன் கைது
நீலாங்கரையில் குடும்பத்தகராறில் மகன் தாக்கியதில் தந்தை பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து மகனை போலீஸார் கைது செய்தனர். சென்னை, நீலாங்கரை, ராஜேந்திரா நகர், வசித்து வந்தவர் முருகேசன்(60). கடந்த 07-ம் தேதி அன்று இரவு தனது தனது மனைவி பத்மாவதியிடம் தகராறு செய்துள்ளார். கோபத்தில் மனைவியை தாக்கியுள்ளார். தாயை அடித்ததால் மகன் திருவேங்கடம் தந்தை முருகேசனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த திருவேங்கடம் தனது தந்தை முருகேசனை கையால் தாக்கியுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த முருகேசன் […]
பள்ளிக்கரணையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள சொத்து அபகரிப்பு: உடந்தையாக இருந்த பெண் அதிகாரி கைது
ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள சொத்தை ஆள் மாறாட்டம் செய்து அபகரிக்க உடந்தையாக இருந்த பெண் சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆலப்பாக்கத்தில் வசிப்பவர் சிதம்பரம். இவரது தந்தை சொக்கலிங்கம். இவர்களுக்கு சொந்தமாக பள்ளிக்கரணையில் உள்ள காமகோடி நகரில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 3352 சதுர அடி காலி இடம் உள்ளது. இடத்தின் உரிமையாளர் சொக்கலிங்கம் 1995-ம் ஆண்டு இறந்தார். அதன் பிறகு, கடந்த 2017 ஆண்டு மார்ச் மாதம் சைதாப்பேட்டை பத்திர பதிவு […]
காஷ்மீரில் சிஆர்பிஎப் முகாமை தகர்க்க தீவிரவாதிகள் முயற்சி: வீரர்கள் பதிலடியால் முறியடிப்பு
காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படை முகாமை தகர்க்க, தீவிரவாதிகள் இன்று (திங்கள்) நடத்திய தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடந்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் சுஞ்சுவான் பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள், அங்கிருந்த ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 2 அதிகாரிகள் பலியாயினர். 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து […]
வழிப்பறி செய்ய பட்டாக்கத்தியுடன் திரிந்த சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது: 14 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம்பறிமுதல்
பல்லாவரம் பகுதியில் வழிப்பறி செய்துவிட்டு கத்தியுடன் சுற்றி திரிந்த 2 சிறுவர்கள் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பல்லாவரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 4 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தபோது அவர்களிடம் ஒரே இரவில் வழிப்பறி செய்த 14 செல்போன்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். பிடிபட்டவர்களில் 2 பேர் இளம் சிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை. இது பல்லாவரத்தில் மட்டுமல்ல சென்னையில் […]
கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரை பிடித்த காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு
மதுரை: செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் நேதாஜி தெருவை சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் வினித்குமார் (23) என்பவரை மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் திரு.பழனிசாமி (PC 3849) என்பவர் விரட்டி பிடித்து D1- தல்லாகுளம் குற்ற பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்ததற்காக மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. மகேஷ் குமார் அகர்வால் IPS., அவர்கள் காவலரை வெகுவாக பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.
லஞ்சப் புகாரில் சிக்கிய கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர்: பின்னணி விவரங்கள்
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கிய விவரத்தின் பின்னணியில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டவர் கணபதி. பாரதியார் பல்கலைக்கழக பல்வேறு துறைகளில் 82 பணியிடங்கள் நிரப்ப 2016 ஆகஸ்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தொடர்புடையவை கோவை பாரதியார் பல்கலை துணை வேந்தர் லஞ்சப் புகாரில் சிக்கினார் நேர்முகத் தேர்வில் […]
வாக்கி டாக்கி கொள்முதல் முறைகேடு; டிஜிபி மீது நடவடிக்கை கோரி பொதுநல வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து 11 வினாக்களை எழுப்பி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருந்தார். அதில் வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரிய மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு 83.45 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளதாக […]
இராஜஸ்தானில் கைதான நாதுராமை தமிழகத்தில் வைத்து விசாரணை
சென்னை: சென்னை கொளத்தூர் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான பிரபல கொள்ளையன் நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகளான பக்தாராம், தினேஷ்சவுத்ரி ஆகியோரை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவரம் அறிந்தவுடன் தமிழக காவல்துறையினர் 3 பேரையும் சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். நாதுராம் உள்ளிட்ட 3 பேரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் 13-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு கோபிநாத் அனுமதி அளித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் 3 […]
10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடத்தல் 4 பேர் கைது
நாகபட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள வாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று அதிகாலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை காவல்துறையினர் மறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் திட்டச்சேரி சாலையில் சென்றுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் வாகனத்தில் அந்த காரை விரட்டி சென்று திட்டச்சேரியை அடுத்த கொந்தை பகுதியில் மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் சோதனை மேற்கொண்டபோது, அதில் சுமார் ரூ.1½ […]