Police Recruitment

பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் காவல் நிலையத்தில் நூலகத்தை உருவாக்கிய காவல் ஆய்வாளர்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி காவல் நிலையத்திற்கு வரும் புகார்தாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அழகிய நூலகம் ஒன்றை காவல் ஆய்வாளர் திரு.ஆடிவேல் அவர்கள் அமைத்துக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் அதற்கென்று ஒரு தனி அறையை ஏற்பாடு செய்தும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து கொடுத்துள்ளார். மேலும் நூலகத்தில் இடம் பெற்றுள்ள புத்தகங்கள் போட்டி தேர்வுகளான குரூப்-1 முதல் குரூப் 4 தேர்வுக்கு தங்களை தயார் செய்யும் வண்ணம் மற்றும் பொழுதுபோக்கு புத்தகங்கள் போன்ற ஏராளமான […]

Police Recruitment

15.11.19 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள த.சி.கா 14ம் அணியில் இன்று வெள்ளிக்கிழமை காவலர் நிறைவாழ்வு பயிற்சி

15.11.19 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள த.சி.கா 14ம் அணியில் இன்று வெள்ளிக்கிழமை காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் காவலர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வை நீக்கும் விதமாக பயிற்சி வகுப்புகளும், காவலர் பணியினை சிறப்பாக எப்படி செய்வது குறித்த பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.

Police Recruitment

சென்னை பெருநகர காவலில் பெண்களின் நலனுக்காக “தோழி அமைப்பு” அறிமுக நிகழ்ச்சி

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று, அவர்களுக்கு மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிடவும், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ, பாதுகாப்பு வழங்கிடவும் ஒவ்வொரு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்தும் இரண்டு பெண் காவல் ஆனிநர்கள் வீதம் சென்னை பெருநகர காவல்துறையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களிருந்தும் 70 பெண் […]

Police Recruitment

சென்னையில் பிரபல நகைக்கடை மேலாளரை மிரட்டி ஒருகோடி ரூபாய் கேட்ட அதிமுக உறுப்பினர் மற்றும் 5 வழக்கறிஞர் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்

. திருவேற்காடு சுந்தரா சோழபுரம் ஏழுமலை நகரை சேர்ந்தவர் தனசேகரன். இவர் கடந்த 3 ஆம் தேதி, தியாகராயநகரில் உள்ள பிரபல எலைட் தங்க நகைக்கடையில் பழைய தங்க நாணயங்கள் கொடுத்து ,3 சவரன் செயின் வாங்கியுள்ளார். பின்னர், திரும்பி வந்த அவர், அந்த தங்க நகை போலியானது என கூறி கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து மிரட்டி 15 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் சில நாட்களில், 15 க்கும் மேற்பட்ட நபர்களுடன் […]

Police Recruitment

விருதுநகர் மாவட்ட செய்திகள்:

விருதுநகர் மாவட்ட செய்திகள்:- நாள் 15-11-2019 தேதி விருதுநகர் மாவட்டம் ஏ.முக்குளம் அருகில் உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அரசு பேருந்தில் ஏறியுள்ளார்,குடும்ப பிரச்சனை காரணமாக விரக்தியில் விஷமருந்தியிருந்துள்ளார் அதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர் உடனடியாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அவர்களிடம் எடுத்துக்கூறி உடனடியாக மருத்துவமனைக்கு வண்டியை ஓட்ட சொல்லியுள்ளார்கள் ஆனால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் சிறிதும் மனிதாபிமானம் இன்றியும் பொறுப்பு இன்றியும், காரியாபட்டி காவல் நிலையத்திற்கு பஸ்சை ஓட்டிச்சென்று […]

Police Recruitment

சாலையோர மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஒருவரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே பூங்கா பள்ளியை அடுத்த தேசிய பாளையம் என்னும் இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று சாலையோரம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது இச்சம்பவம் புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார மக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அப்பகுதி மக்கள் அச்சத்தில் நேற்று மதியம் 14 -11 – 2019 வியாழக்கிழமை சுமார் 12 மணி அளவில் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர் […]

Police Recruitment

காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக மேற்கொண்ட காவல்

காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக மேற்கொண்ட காவல் துறையினருக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கிய பாராட்டுச் சான்றிதழை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப. அவர்கள் வழங்கி கௌரிவித்தனர் காஞ்சிபுரத்தில் 01.07.2019 முதல் 17.08.2019 வரை நடைபெற்ற ஸ்ரீ அத்தி வரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக மேற்கொண்ட காவல்துறையினரைமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பாராட்டி, தனித்தனியாக அனைத்து […]

Police Recruitment

குற்ற வழக்குகளில் ஈடுபட்ட மூவர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

மதுரை மாநகர் விஸ்வநாதன் நகர், கோ.புதூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருடைய மகன் ஆனந்தன் என்ற ஆனந்தரங்கன் 23/19 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் சப்பாணி கோவில் தெரு, மதிச்சியத்தைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவருடைய மகன் மீனாட்சிசுந்தரம் 22/19 இவர் மதுரை மாநகரில் கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் மதுரை கோட்டை தெரு, திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சேது என்பவருடைய மகன் சரத்குமார் என்ற சரத் 25/19 இவர் […]

Police Recruitment

கன்னியாகுமரி மாவட்டம் 14.11.2019 இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு

கன்னியாகுமரி மாவட்டம் 14.11.2019 இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. விஜய பாஸ்கர் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினார். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு.செல்வராஜ் சுரபி கன்னியாகுமரி மாவட்டம்