Police Department News

மதுரை, ஆழ்வார்புரம் பகுதியில் கணவன் குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போடுவதால், மனைவி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை, மதிச்சியம் போலீசார் விசாரணை

மதுரை, ஆழ்வார்புரம் பகுதியில் கணவன் குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போடுவதால், மனைவி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை, மதிச்சியம் போலீசார் விசாரணை

மதுரை, ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்தவர் சித்ராதேவி இவருக்கு வயது 40/21, இவருடைய கணவர் தினசரி குடித்து விட்டு வந்து வீட்டில் சண்டை போடுவதால் இவர் ஏற்கனவே மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார், இந்த நிலையில் அவர் மீண்டும் நேற்று குடித்து விட்டு வந்து மனைவி சித்ராதேவியிடம் சரமாரியாக வார்த்தைகளை கொட்டி சண்டையிட்டுள்ளார்,இதனால் மனமுடைந்த மனைவி சித்ராதேவி வீட்டில் யாரும் இல்லாத சமயம் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சித்ராதேவியின் மகன் முத்துமுனிச் அளித்த புகாரின் பேரில் மதுரை, மதிச்சியம் E2, காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த சித்ராதேவின் உடலை உடல்கூராய்விற்கு அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.அதன் பின் விசாரணையை விரிவு படுத்தினர். கணவன் குடித்து விட்டு வந்து மனையிடம் அடிக்கடி சண்டை போட்டதால் மனமுடைந்த மனைவி தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, ஆழ்வார்புரம் பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.