Police Department News

மதுரை, அட்டபட்டியில் கட்டிட சுவர் இடிந்து கூலி தொழிலாளி இறப்பு

மதுரை, அட்டபட்டியில் கட்டிட சுவர் இடிந்து கூலி தொழிலாளி இறப்பு

மதுரை, ஐயர்பட்டியை சேர்ந்த பெரியகருப்பன் மகன் வீரணன் வயது 45/21, இவர் கட்டிட வேலை செய்யும் தின கூலி தொழில் செய்து வருகிறார் அட்டப்பட்டியில் மூன்று நாட்களாக மெய்யப்பன் என்பவருடைய பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது நேற்று 22-04-21 ந் தேதி மாலை வீட்டின் பழைய சுவர் இடிந்து அவர் மேலே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார் சம்பவ இடத்திற்கு வந்த கீழவளவு சார்பு ஆய்வாளர்.திரு.முருகராஜா அவர்கள் இறந்த வீரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்து விசாரணை செய்து வருகிறார் மேற்படி இறந்த வீரணனுக்கு பானுமதி என்ற மனைவியும் அழகு வள்ளி. சங்கீதா என்ற 2 மகள்களும் பாலமுருகன் என்ற ஒரு மகனும் உள்ளார்கள் சம்பவ இடத்தில் இறந்த வீரணனின் இறப்பு அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.