Police Department News

30 மணி நேர ஊரடங்கு மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில்திருப்பூர்மாவட்டம் . தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

*30 மணி நேர ஊரடங்கு மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில்திருப்பூர்மாவட்டம் .
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து கடந்த ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஆண்டில் தமிழகத்தில் முதல் நாளாக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் சோதனைச்சாவடி மற்றும் புஷ்பா ஜங்ஷன் சோதனைச்சாவடி மற்றும் பழைய பேருந்து நிலைய சோதனைச்சாவடி காந்திநகர் அவிநாசி ரோடு உள்ள சோதனைச் சாவடி அனுப்பர்பாளையம் சோதனை சாவடி அம்மாபாளையம் சோதனை சாவடி பூண்டி சரகம் சோதனைச் சாவடி பெருமாநல்லூர் சாலை பூலுவபட்டி சோதனைச் சாவடி மற்றும் போயம்பாளையம் சோதனை சாவடியில் இருந்து திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர் வ அவசர உதவிக்கு மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றது விதிமுறைகளை மீறி வருபவர்களிடம் அபராதம் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றது…

Leave a Reply

Your email address will not be published.