ராமநாதபுரத்தில் பொதுமக்களிடம் அத்து மீறி நடந்த காவலர் சஸ்பெண்ட். காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை
ராமநாதபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரின் கார் டிரைவராக பணி புரிபவர் ராஜ்குமார். இவர் கொரோனா நோய் தடுப்பு வாகன சோதனையின் போது பொது மக்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் வந்தது, புகாரை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கார்த்திக் அவர்கள் விசாரணை நடத்தினார், விசாரணையில் ராஜ்குமார் அத்துமீறியது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.