கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஏர்வாடி காவல்நிலைய ஆய்வாளர் திரு. ஐயப்பன் அவர்கள் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்தும் அதை தடுக்கும் விதமாக முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் சானிடைசர் மூலம் அடிக்கடி சுத்தம் செய்தும் அவசிய தேவைகள் இன்றி வெளியே செல்லுவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறும் எடுத்துரைத்து இலவசமாக முகக் கவசம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.