Police Department News

மதுரை மாவட்டம், மேலூர் அருகே போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

மதுரை மாவட்டம், மேலூர் அருகே போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் போலி நகைகளை அடகுக்கடையில் அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் , ஆட்டுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க முலாம் பூசிய நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட தேவகோட்டையை சேர்ந்த சிவசக்தி என்ற இளைஞனை பிடித்த மேலூர் போலீசார் அவரிடமிருந்து 4 லட்சம் பணம், தங்க முலாம் பூசிய 46 பவுன் நகைகள்கள், ஒரு இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் போலியான முகவரி கொடு்த்து இவ்வாறு பல மோசடிகளில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published.