Police Department News

கையடக்க CPU-உருவாக்கி சாதனை நிகழ்த்திய சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

கையடக்க CPU-உருவாக்கி
சாதனை நிகழ்த்திய சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்று
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு
🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨

🚨🔥திருவாரூர் மாவட்டம்
திருவாரூர்,
மருதபட்டினம்
டாக்டர்.கலைஞர் நகரில் வசிக்கும்
செல்வன்.மாதவ் 14
த/பெ சேதுராஜன்
என்ற சிறுவன் திருவாரூர் சாய்ராம் மெட்ரிக் பள்ளியில்
09-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

🚨🔥இவர் தனது சொந்த
முயற்சி மற்றும் அறிவை பயன்படுத்தி
கணிப்பொறி சாதனமான CPU-கருவியை
கையடக்க அளவில்
உருவாக்கி அதனை
பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளார்.

🚨🔥மேற்படி சிறுவனின் சாதனையை அறிந்த
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
சிறுவன் மாதவை
நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்கள்.

🚨🔥இந்நிலையில்
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.V.R.ஸ்ரீனிவாசன்
அவர்கள் இன்று(29.07.21)
மேற்படி சிறுவன் மாதவ்
வீட்டிற்கு திடீரென்று சென்று சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்கள்.

🚨🔥மேலும் அச்சிறுவனிடம்
வெகுநேரம் செலவிட்டு
பேசி அவரது எதிர்காலம்,
படிப்பு,வேலை குறித்து உரையாடி சிறுவனக்கு
வழிகாட்டினார்கள்.

🚨🔥மேலும் இத்தகைய சாதனையை நிகழ்த்தி
திருவாரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சிறுவனுக்கு
நினைவுப்பரிசு,
டாக்டர்.அப்துல்கலாம் அவர்களின் அக்கினிச்சிறகுகள் புத்தகம்,மற்றும் இனிப்புகள் வழங்கி
சிறுவன் மற்றும் குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்து
சிறுவனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள்.
🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨
திருவாரூர் மாவட்ட காவல்துறை

Leave a Reply

Your email address will not be published.