Police Department News

பெண் குறித்து சமூக வலைத்தளத்தில் இழிவாக பதிவிட்ட நபர் கைது.! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை.

பெண் குறித்து சமூக வலைத்தளத்தில் இழிவாக பதிவிட்ட நபர் கைது.! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை.

06.08.2021 திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் குறித்து சமூக வலைத்தளத்தில் இழிவாக பதிவிட்ட நபர் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 04.08.2021 ம் தேதி புகார் கொடுத்தனர்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன்,. அவர்களின் உத்தரவின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல் நிலைய ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் விசாரணை செய்ததில் பெண் குறித்து இழிவாக பேசிய நபர் வக்கம்பட்டியைச் சேர்ந்த சிவா வயது 25 என்பவர் என தெரியவந்தது இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.