Police Department News

சென்னை சுனாமி நகர் செம்மஞ்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி J11 கண்ணகி நகர் காவல்துறையினரால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

சென்னை சுனாமி நகர் செம்மஞ்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி J11 கண்ணகி நகர் காவல்துறையினரால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

எதிரி சுரேஷ் என்கிற கொட்டை சப்பி சுரேஷ் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டது குறித்து
எதிரி சுரேஷ் என்கிற கொட்டை சுரேஷ் த/பெ ரமேஷ் எண் 5718 சுனாமி நகர் செம்மஞ்சேரி என்பவர் மீது துரைப்பாக்கம் செம்மஞ்சேரி கண்ணகி நகர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, அடிதடி ,வழிப்பறி ,கொலை முயற்சி, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், போன்ற பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறை சென்றுள்ளார். இவரது நடவடிக்கையை கண்காணிக்கும் பொருட்டும் குற்ற செயலில் ஈடுபடாமல் பார்க்கும் பொருட்டும் இவர் மீது கண்ணகி நகர் காவல் நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சரித்திர பதிவேடு ஆரம்பிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். இவர் மீது கண்ணகி நகர் காவல் நிலையத்தில் கடந்த 2017 ஆம் வருடம் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது. கடந்த 6.8.2021 ம் தேதி கண்ணகி நகர் காவல் நிலைய குற்ற எண் 10082021 பிரிவு 341,294b,336,392,397,506n IPC வழக்கில் சம்பந்தப் பட்டதால் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மேற்படி எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையால் சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் 19 .9 .2021 ம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.