Police Department News

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே சார்பு ஆய்வாளர் திரு.விஜயக்குமார் அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை கொண்டு வந்த அதே பகுதியை சேர்ந்த அய்யாகுட்டி என்பவரின் மகன் கண்ணன்(40) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது..

Leave a Reply

Your email address will not be published.