Police Department News

மதுரையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த இரண்டு குற்றவாளிகள் கைது

மதுரையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த இரண்டு குற்றவாளிகள் கைது

கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த இருவரை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் 2017ல் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட விவகாரத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இரண்டு குற்றவாளிகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அவர்கள் தப்பி சென்ற நிலையில் வழக்கு நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில் மதுரை கள்ள நோட்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் திரு.அழகர்சாமி அவர்கள் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீசார் நிலுவையிலிருந்த பிடியாணையினை நிறைவேற்ற மேற்கு வங்கம் சென்றனர்.

அங்கு மால்டர் நகரில் பதுங்கியிருந்த வஹதுரகுமான் வயது 32/2021, திலிப் பிரமான் வயது 37, ஆகிய இருவரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அதன்பின் அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.