Police Department News

மாண்புமிகு, குடியரசு தலைவரின் வண்ணக் கொடியை பெற்ற தமிழ்நாடு காவல் துறை:

மாண்புமிகு, குடியரசு தலைவரின் வண்ணக் கொடியை பெற்ற தமிழ்நாடு காவல் துறை:

இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய காவல்துறையாகவும்,150 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுச் சாதனையை தமிழகத்திற்கு உரித்தாக்கி வரும் தமிழ்நாடு காவல்துறையின் மகத்தான சேவையையும், துணிச்சல் மிகுந்த சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக குடியரசுத் தலைவரின் கொடியினை 31.07.2022 அன்று ராஜரத்தினம் விளையாட்டு மைதான அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழகத்து அவையின் அமைச்சர் பெருமக்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில், மாண்புமிகு.இந்திய குடியரசுத் துணைத் தலைவர் மதிப்பிற்குரிய எம். வெங்கையாநாயுடு அவர்கள் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடியை தமிழ்நாடு காவல்துறைக்கு வழங்கினார்.

கெளரவம் வாய்ந்த குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடியானது தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநரும், காவல் படைத்தலைவருமான மரியாதைக்குரிய முனைவர் செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். அவர்களிடத்தில் தமிழ்நாட்டு காவல் துறையினை பார் போற்றும் கம்பீரத்துடன் பட்டொளி வீசி பறந்த அக்காட்சியானது பார்ப்பவர் கண்களை மெய்சிலிர்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.