Police Department News

காரிமங்கலம் அருகே ஜவுளி வியாபாரி வீட்டை உடைத்து நகை கொள்ளை! வாலிபர் கைது

காரிமங்கலம் அருகே ஜவுளி வியாபாரி வீட்டை உடைத்து நகை கொள்ளை! வாலிபர் கைது

தருமபுரி மாவட்டம் காரிமங்களம் அடுத்த பொம்மஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த வர் சிவகுமார் 35. ஜவுளி வியாபாரி. இவர் கடத்த ஏப்ரல் மாதத்தில் தனது தாயருக்கு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டு குடும்பத்தினருடன் அங்கு சென்று உள்ளார். மேலும் ஜவுளி தொழில் செய்து வருவதால் வெளியூருக்கு சென்று வரும் நிலையில் கடந்த ஏப்ரல் 30 தேதி வெளியூர் சென்று வீடு திரும்பிய போது
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சி அடைந்தார் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இது குறித்து காரிமங்கலம் காவல்துறையில் புகார் செய்தார்
புகாரின் அடிப்படையில் காரிமங்கலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காரிமங்கலம் பாலக்கோடு ரோட்டில் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் துணை ஆய்வாளர் ஜவகர் மற்றும் காவல் துறையினர் அப்பகுதியில் சந்தேகத்திடமான முறைவில் சுற்றிக் கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்
மகேந்திரமங்கலம் அடுத்த ஊமையன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சிங்காரம் மகன் கிருஷ்ணமூர்த்தி 38 என தெரியவந்தவுடன் அவர் பொம்மஅள்ளி சிவகுமார் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு தங்க நகைளை கொள்ளை அடித்ததும் தெரியவந்தது இதை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 13 பவுன் தங்க நகை களை பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.