Police Department News

தென்காசியில் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.E.T.சாம்சன்,IPS., அவர்கள் தொடங்கி வைத்தார்

தென்காசியில் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்

தென்காசியில் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.E.T.சாம்சன்,IPS.,தொடங்கி வைத்தார்

சாலை பாதுகாப்பு வார விழா இறுதி நாளன்று தென்காசி போக்குவரத்து காவல் துறை தென்காசி கேன்சர் சென்டர் மற்றும் ப்ரோவிஷன் கண் மருத்துவ மனை இணைந்து தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் இலவச கண் பரிசோதனை மற்றும் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாம்சன் அவர்கள் துவக்கி வைத்தார் முகாமுக்கு தென்காசி போக்கு வரத்து காவல் ஆய்வாளர் திரு. பிரபு தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தென்காசி ஆர்டிஓ
பொறுப்பு கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை வகித்து சிறப்புரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் போலீசாரின் நடவடிக்கை அனைத்தும் பொது மக்களின் பாதுகாப்பை
முன்னிறுத்தியே நடைபெறுகிறது. எனவே மது அறுந்தி வாகனம் ஓட்டுவதற்கும் ஹெல்மெட் போடாத நபர்களுக்கும் அதிக சரக்குகளை ஏற்றி
செல்லும் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்து விபத்தில்லாத மாவட்டமாக தென்காசி திகழ ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார்
தென்காசி கேன்சர் சென்டர் நிறுவனர் மருத்துவர் சிவச்சந்திரன் இயக்குனர் மருத்துவர் அருணா சந்திரசேகர் தென்காசி ப்ரோவிசன் கண் மருத்துவ மனை மருத்துவர் ராஜகுமாரி ஆகியோர் வாகன
ஓட்டுனர்களுக்கு கண் பாதுகாப்பு மற்றும் வாய் புற்று நோய்க்கு காரணமான புகையிலை பான் குட்கா போன்ற பொருட்காளை தவிற்பது பற்றி உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து இலவச கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.E.T.சாம்சன்,IPS., தானும் முகாமில் கண் பரிசோதனை செய்து கொண்டார் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
பிரபு வரவேற்புரையாற்றினார். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பற்றி ஆர்டிஓ பொறுப்பு கண்ணன் உரையாற்றினார் மேலும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் சாம்சன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வாகன முன் விளக்கு பகுதியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி கேன்சர் சென்டர் நிர்வாக இயக்குனர் பாரதிராஜா புரோவிசன் நிர்வாக இயக்குனர் நவீன் தென்காசி மெடிக்கல் சென்டர் பொது மேலாளர் அகமது பாத்திமா மற்றும் குற்றாலம் மெட்ரோ
ரோட்டரி கிளப் வழக்கறிஞர் சுப்பிரமணியன் மருத்துவர் ராஜ்குமார் முன்னால் ரோட்டரி கவர்னர் முருகன்ராஜ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் 200 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்

முடிவில் தென்காசி கேன்சர் சென்டர் நிறுவனர் மருத்துவர் சிவச்சந்திரன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.