Police Department News

அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்த 15 பெண்கள்: யார் தெரியுமா?

அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்த 15 பெண்கள்: யார் தெரியுமா?

அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்த 15 பெண்கள்: யார் தெரியுமா?

1950-ம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் நாள், சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை இந்திய அரசும், மக்களும் ஏற்றுக்கொண்டு அமல்படுத்திய நாளைத்தான் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்த பெண்கள் பற்றிய குறிப்புகள் வெகுசில தான் உள்ளன. அந்தக் குழுவில் பெண்கள் இருந்ததனால்தான் பெண்களுக்கு பல உரிமைகள் கிடைக்க வழிவகை ஏற்பட்டது.

அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்த 389 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள்தான் பெண்கள். அவர்கள் மற்ற உறுப்பினர்களுடன் வாதாடினர், விவாதித்தனர். நேர்மையான ஜனநாயகத்தை உருவாக்குவதற்கு சாத்தியமான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டனர்.

அரசியலமைப்பு சட்ட வரைவை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்த இந்த 15 பெண்களை வெகு சிலருக்குத்தான் தெரியும். அம்பேத்கர், நேரு, வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் எப்படி அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதில் தனிப்பங்கு வகித்தனரோ அதே அளவுக்கு அக்குழுவில் இடம்பெற்றிருந்த ஹன்சா மேத்தா, பூர்ணிமா பானர்ஜி, துர்காபாய் தேஷ்முக் ஆகியோரின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திர போராட்ட வீரர்களாக, வழக்கறிஞர்களாக, சமூக சீர்திருத்தவாதிகளாக, போராளிகளாக, அரசியல்வாதிகளாக எல்லோருக்குமான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க இவர்கள் வழிவகுத்தனர். சிறுபான்மையினர் உரிமைகள், இட ஒதுக்கீடு, நீதித்துறை, வழிகாட்டும் நெறிகள், பெண்களின் இடஒதுக்கீடு, பள்ளிக்கல்வி ஆகியவற்றுக்கான கொள்கைகளை உருவாக்குவதில் இவர்கள் பங்காற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.