Police Department News

வாகனம் மோதி கட்டிட மேஸ்திரி சாவு

வாகனம் மோதி கட்டிட மேஸ்திரி சாவு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 57). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக காரிமங்கலம் வந்தார். மொரப்பூர் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மாதேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் காரிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணை அதன் பேரில் காவல்துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாதேஷ் மீது மோதி விட்டு சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.