Police Department News

கொலை வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 14 வருடம் ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 14 வருடம் ஆயுள் தண்டனை

தருமபுரி அருகே குண்டலப்பட்டி நடுவீதி பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பாக்யராஜ் (வயது32). இவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குண்டலப்பட்டி ஓம் சக்தி கோவில் அருகே உள்ள சந்தோஷ் குமார் (35) என்பவரை கடந்த 13.9.2020 ஆம் வருடம் மாலை பாக்யராஜ் கத்தியால் குத்தினார். இதில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கினை தருமபுரி மதிகோன்பாளையம் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நேற்று இறுதி கட்ட விசாரணை முடிவடைந்து பாக்யராஜ் குற்றவாளி என நிரூபணம் ஆனதை அடுத்து நீதிபதி மோனிகா குற்றவாளி பாக்யராஜுக்கு 14 வருடம் ஆயுள் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.