Police Department News

பழனியில் லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த கும்பல்

பழனியில் லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த கும்பல்

திண்டுக்கல்லைச் சேர்ந்த லாரி டிரைவர் ஹரிஹரன் (வயது 25). இவர் எர்ணாகுளத்திற்கு பொருட்களை ஏற்றி சென்று கொண்டு இருந்தார். நேற்று இரவு பழனி புறநகர் பகுதியில் மலைக்கோவிலுக்கு பின்புறம் சென்ற போது லாரியை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்கச் சென்றார். அப்போது மறைந்திருந்த ஒரு கும்பல் ஹரிஹரனை கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிஹரன் தன்னிடம் இருந்த ரூ.2000 பணத்தை கொடுத்தார். இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என சொல்லி விட்டு அக்கும்பல் தப்பி ஓடி விட்டனர். இதனால் ஹரிஹரன் போலீசில் புகார் செய்தால் நேர விரயமாகி விடும் என நினைத்து சென்று விட்டார்.

பழனிக்கு வரும் வியாபாரிகள், டிரைவர்கள் ஆகியோர் தொடர்ந்து இது போல் கத்தி முனையில் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்படுவது அவ்வ ப்போது நடந்து வருகிறது. எனவே போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரபடுத்தியும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.